search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோயில் நிலங்கள்"

    • 99 வருட ஒப்பந்தத்தை வைத்து 2018 ஆம் ஆண்டு பத்திரப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
    • சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்தவர்கள் வெளியேற மறுப்பதாக அறிக்கை தாக்கல்

    மதுரை:

    சென்னையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அவர் தனது மனுவில், 'மதுரை ஆதினம் மடம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த மடத்திற்கு சொந்தமான தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சொத்துக்கள் இருக்கிறது. இதன் தற்போதைய மதிப்பு பல 100 கோடி ரூபாய் ஆகும். இந்நிலையில் 2008 ஆம் ஆண்டு இருந்த மதுரை ஆதினம் அருணகிரிநாதர் தரப்பில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா மற்றும் மதுரை விமான நிலையம் அருகில் உள்ள 1191 ஏக்கர் நிலங்களை புதுச்சேரியை சார்ந்த தனியார் நிறுவனத்திற்கு 99 வருட ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது.

    கோயில் நிலங்களை எல்லாம் 99 வருட ஒப்பந்தம் தான் செய்யமுடியும். இதை வைத்து 2018 ஆம் ஆண்டு பத்திரப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதாவது அந்த ஒப்பந்ததை காண்பித்து போலியாக பத்திரப்பதிவு செய்திருக்கிறார்கள். இது சட்ட விரோதமானது. ஆதின மடங்களுக்கு சொந்தமான சொத்தை தனியாருக்கு விற்பனை செய்ய முடியாது என்ற சட்டம் இருக்கிறது. மேலும் நீதிமன்ற தீர்ப்புகளும் இருக்கிறது. ஆகவே உரிய நடவடிக்கை எடுத்து இந்த ஒப்பந்தங்களை எல்லாம் ரத்து செய்து ஆதின மடத்திற்கு சொந்தமான சொத்துக்களை எல்லாம் மீட்க வேண்டும்' என்று கூறியிருந்தார்.

    இந்த மனுவானது நீதிபதிகள் மகாதேவன் சத்திய நாராயண பிரசாத் கொண்ட அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தற்போதைய 293வது ஆதினமான ஞானசம்பந்தர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அருண் சாமிநாதன், அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அதில் 'மறைந்த 292வது ஆதினம் இருந்தபோது இந்த ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. தற்போது இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்தவர்கள் வெளியேற மறுக்கிறார்கள். அவர்கள் பணபலம் மிக்கவர்கள். எனவே நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என கேட்டிருந்தார்.

    இதனை தொடர்ந்து வழக்கில் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கி இருக்கிறார்கள். மதுரை ஆதின மடத்திற்கு சொந்தமான 1191 ஏக்கர் நிலத்தை மீட்க இந்து சமய அறநிலையத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். நிலத்தை மீட்பதற்கு காவல் துறையினர் போதிய பாதுகாப்பை வழங்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    அனைத்து கோயில்களிலும் அசையா சொத்துக்களை கண்டறியும் குழு மற்றும் பரிசீலனை குழு அமைக்கப்பட்டு நில அளவை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
    தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு சொந்தமான அசையா சொத்துக்களை நவீன ஜி.ஐ.எஸ். தொழில் நுட்பத்துடன் நில அளவை செய்து வரைபடம் தயாரிக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு உத்தரவிட்டுள்ளார்.

    அந்த உத்தரவின்பேரில் அனைத்து கோயில்களிலும் அசையா சொத்துக்களை கண்டறியும் குழு மற்றும் பரிசீலனை குழு அமைக்கப்பட்டு நில அளவை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

    இப்பணியில் ஜி.ஐ.எஸ். என்ற நவீன தொழில் நுட்பத்தின்படி மேம்பிங் பணியை மேற்கொள்ள அரசு நில அளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குநர் வழங்கிய சிபாரிசின் அடிப்படையில் அங்கீகரிக்கப்பட்ட 200 நில அளவையாளர்களைக் கொண்டு அனைத்து நில அளவை பணிகளும் மேற் கெள்ளப்பட்டு வருகிறது.

    அதன் அடிப்படையில் நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் வட்டம் நாகேஸ்வரர் கோயில், காளியம்மன் கோயில், மாரியம்மன் கோயில், விநாயகர் கோயில், ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டம் கெட்டி விநாயகர் கோயில், பிரம்மேஸ்வரர் கோயில், கொடுமுடி வட்டம் வரதராஜப் பெருமாள் வகையறாத் கோயில், தூத்துக்குடி மாவட்டம், சங்கர நாராயணசுவாமி கோயில், சங்கரன் கோயில், திருமலைகுமார சுவாமி கோயில், பண்பொழி, சேலம் மாவட்டம், சுகவனேஸ்வரர் கோயில், தேனீ மாவட்டம், ஆண்டிபட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் உட்பட அனைத்து கோயில்களுக்கு சொந்தமான அசையா சொத்துக்களின் வரைபடம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.

    இது வரை 9,100 ஏக்கர் பரப்பளவு நிலம் அளவீடு செய்யப்பட்டு எச்.ஆர்.சி.இ. என்ற பெயர் இடப்பட்ட நடுக்கல் ஊண்டப்பட்டு அதனை சுற்றி முள்வேலி அமைக்கும் பணிகள் நடைப்பெற்று வருகிறது. தற்போது தொடர்மழையின் காரணமாக அளவீடும் பணிகள் தோய்வு ஏற்பட் டுள்ளது. மழை குறைந்தவுடன் இப்பணிகள் தொடர்ந்து நடைபெறும்.
    ×